sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியுடன் இணைப்பு; மலுமிச்சம்பட்டியில் எதிர்ப்பு

/

மாநகராட்சியுடன் இணைப்பு; மலுமிச்சம்பட்டியில் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைப்பு; மலுமிச்சம்பட்டியில் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைப்பு; மலுமிச்சம்பட்டியில் எதிர்ப்பு


ADDED : ஜன 27, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சியின் பரப்பை அதிகரிக்கும் வகையில் மதுக்கரை நகராட்சி, மலுமிச்சம்பட்டி மற்றும் சீரபாளையம் ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு இரு ஊராட்சிகளில் வசிப்போர் கடும் எதிரப்பு தெரிவித்து, கண்டன போராட்டம், ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தொடர்ந்து நேற்று குடியரசு தினம் முன்னிட்டு மலுமிச்சம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 13 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை பதிவு செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பி.டி.ஓ., சரவணன் உயரதிகாரியிடம் பேசினார்.

இதையடுத்து தீர்மானங்கள் நிறுத்தப்பட்டு, மாநகராட்சியுடன் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கார்த்திகேயன், 100 பெண்கள் உள்பட, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீரபாளையம் ஊராட்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்) கவுசிகா தலைமையில் கூட்டம் நடந்தது. 350 பேர் தங்களது ஆதார் கார்டு நகலுடன், மாநகராட்சியுடன் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் தலைவர் கணேசன் உள்பட, 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் எட்டு ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us