sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

/

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்


ADDED : ஜன 22, 2025 11:26 PM

Google News

ADDED : ஜன 22, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்து கூறியதாவது:

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளை ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகள் வைக்க வேண்டும். இதன்மூலம் வெள்ளை ஈக்கள் கவர்ந்து அழிக்கப்படும்.

மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை, விளக்கெண்ணை அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை, ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில் ஆறடி உயரத்தில் தொங்க விட்டு, வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.

பாதிப்புக்குள்ளான ஓலைகளின் மீது மிக வேகமாக தண்ணீரை அடிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us