sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

53 நாளில் 31 டி.எம்.சி., உயர்வு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

/

53 நாளில் 31 டி.எம்.சி., உயர்வு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

53 நாளில் 31 டி.எம்.சி., உயர்வு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

53 நாளில் 31 டி.எம்.சி., உயர்வு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு


ADDED : டிச 05, 2024 06:13 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் இருப்பு, 53 நாட்களில், 31 டி.எம்.சி., உயர்ந்துள்ளதால், விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஜூலை, 30ல், அணை நிரம்பியது. பின் நீர்வரத்து குறைந்த நிலையில் டெல்டா நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், அக்., 12ல் நீர்மட்டம், 89 அடி, நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யாக சரிந்த நிலையில், நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது.

நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 9,246 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 29,021 கனஅடியாகவும், நேற்று காலை, 8:00 மணிக்கு, 32,240 கனஅடியாகவும் அதிகரித்தது. இரு வாரங்களாக அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது.

வரத்தை விட திறப்பு குறைவால், நேற்று காலை அணை நீர்மட்டம், 113.21 அடி, நீர் இருப்பு, 83.05 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. 53 நாட்களில் அணை நீர்மட்டம், 24 அடி, நீர் இருப்பு, 31 டி.எம்.சி., உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும், 10 டி.எம்.சி., மட்டும் தேவை. நீர்வரத்து, திறப்பில் இதேநிலை நீடித்தால், நான்கு நாட்களில் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us