'எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம் அவருக்கு இணை யாருமில்லை!'
'எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம் அவருக்கு இணை யாருமில்லை!'
ADDED : மார் 22, 2026 05:22 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவர்களுடன் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., கூட்டணி மக்கள் ஆதரவு பெற்றுள்ளது. நிச்சயம், சட்டசபை தேர்தலில், 210 இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணி இன்னும் 'செட்' ஆகவில்லை. அங்குள்ள கூட்டணி கட்சிகள், ஒருத்தரை ஒருத்தர் காலை வாரி விடுவதும், தி.மு.க.வை வெற்றி பெறவிடாமல் என்ன செய்ய வேண்டுமோ அந்த காரியங்களை செய்கின்றனர். இதே நிலை தான் 2001, 2011ம் ஆண்டு தேர்தல்கள் நடந்தது. இந்த தேர்தலோடு தி.மு.க., முடிந்துவிடும்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்; அவருக்கு இணை யாரும் இல்லை. அவருக்கு பின், பல நடிகர்கள் கட்சி துவக்கினர். தனியாக நின்று எதிர்கட்சியாக கூட அவர்களால் வர முடியவில்லை. எனவே, நடிகர்கள் நாடாள முடியுமா என கேட்டால், காலம் தான் அதற்கான பதிலை சொல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.
