sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

/

 எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு


ADDED : டிச 25, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, கோவையில் அ.தி.மு.க.,வினர் நினைவஞ்சலி செலுத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஹுசூர் ரோட்டில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட தலைமையகத்தில் இருந்து எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் தலைமையில், பேரணியாகச் சென்ற அ.தி.மு.க.,வினர், அவிநாசி சாலையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெ., ஆகியோரை வாழ்த்தி கோஷம் எழுப்பப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் வென்று, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி ஏற்றனர். பின்னர், 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கட்சி அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான அ.தி.மு.க.,வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ.,ஜெயராம், அமைப்புச் செயலாளர் செ.ம.வேலுசாமி, மாநில இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us