/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
/
நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 18, 2025 11:12 PM
பெ.நா.பாளையம்; செங்காளிபாளையம் அக்கம்மாள் கோவில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வனிதா குமாரி ஆண்டு அறிக்கை வாசித்தார். இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பமணி அருள்குமார் தலைமை வகித்தார். எஸ்.எஸ். குளம் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சத்துணவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.