sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2024 05:48 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் ; தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி, பச்சாபாளையம், ஆவின் பால் பண்ணை வளாகத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கறவை மாடுகளுக்கு வழங்கும் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், ஆவின் நிர்வாகம், பசு மாட்டு பாலுக்கு லிட்டருக்கு, 5 ரூபாயும், எருமை மாட்டு பாலுக்கு, 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை, 5 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். மாட்டு தீவனங்களை அரசே உற்பத்தி செய்து, பாதி விலைக்கு விற்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு, இலவச தடுப்பூசி மற்றும் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தங்களது கோரிக்கைகளை ஆவின் நிர்வாகம் ஏற்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுவோம் எனவும், தெரிவித்தனர்.

இதில், மாவட்ட தலைவர் காளப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us