/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
/
பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
பால் வியாபாரிகள் உரிமம் வாங்கணும்; உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 10:30 PM
கோவை; வீடு வீடாகச் சென்று பால் வினியோகிப் போரும், தேசிய உணவு நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி யுள்ளது.
வீடுகளுக்கு நேரில் சென்று பால் வினியோகிப்பவர்கள், பெரும்பாலும் தேசிய உணவு தர நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) பதிவு மற்றும் உரிமம் வைத்திருப்பதில்லை. அவர்களும் உரிமம் பெற வேண்டியது அவசியம்.
இதுதொடர்பாக, வழிகாட்டுதல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''பால் வியாபாரத்தில் ஈடுபடும் அனைவரும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 500 லிட்டருக்கு குறைவாக விற்பனை செய்பவர்கள் எப்.எஸ்.எஸ். ஏ.ஐ., பதிவும், அதற்கு மேல் விற்பனை செய்பவர்கள் உரிமமும், கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆவின் நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசியுள்ளோம்.
தவிர, வீடுகளுக்கு பால் நேரடியாக வினியோகிக்கும் வியாபாரிகளுக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடத்த உள்ளோம், '' என்றார்.