sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 23 ல் துவக்கம்

/

மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 23 ல் துவக்கம்

மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 23 ல் துவக்கம்

மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 23 ல் துவக்கம்


ADDED : ஜன 20, 2025 06:12 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுாரில் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்குகிறது.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா என்னும் பயிற்சி சொக்கம்பாளையத்தில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. சொக்கம்பாளையம் தவம் மையத்தில் வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.

இதில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் கற்பிக்கப்படும். பயிற்சி பெறுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திலும், சமூகத்திலும், மனித உறவுகளிலும், அமைதியும் இனிமையும் பெருகும்.

அறிவுத்திறனை பெருக்கி, ஒழுக்க பழக்கங்கள் மேம்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு, அன்னுார் மன்றத்தில், தினமும் மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரை, தியானமும், சிந்தனை உரையும் நடைபெறுகிறது.

'மேலும் விவரங்களுக்கு, 94435 60525 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்






      Dinamalar
      Follow us