/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்
/
மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்
ADDED : டிச 29, 2025 05:24 AM
அன்னூர்: அன்னூர், அ.மு.காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் சார்பில், வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, யோகா மற்றும் தியான பயிற்சி வருகிற 2ம் தேதி துவங்குகிறது.
அன்னூர், தாசபளஞ்சிக மண்டபத்தில், வருகிற 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து, 12 நாட்களுக்கு, தினமும் மாலையில், ஒன்றரை மணி நேரம் பயிற்சி நடைபெறும்.
இதில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை கற்பிக்கப்படும். பயிற்சி பெறுவதன் மூலம், மன அமைதி பெற முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தெளிவு ஏற்படும். 'மேலும் விவரங்களுக்கு, 95975 83947, 97899 88949 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என மனவளக்கலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

