sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்

/

கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்

கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்

கனிம வளம் கடத்தல் புகார்; நாளை ஆய்வு கூட்டம்


ADDED : ஜூன் 10, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் தாலுகாவில், கனிம வளம் எடுப்பது, கொண்டு செல்வது குறித்த புகார் மீதான ஆய்வுக் கூட்டம் நாளை நடக்கிறது.

அன்னூர் தாலுகாவில், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார், பொகலுார், வடக்கலுார் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் தினமும் லோடு கணக்கில் சட்ட விரோதமாக, அனுமதியின்றி, மண் எடுத்து கடத்தப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் பெறப்பட்டது. இதையடுத்து, கோவை கலெக்டர் உத்தரவின் பேரில், அன்னுார் தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 24 மணி நேரமும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து கண்காணிப்பு குழுவால், புகார்கள், குறித்து ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க, ஆய்வுக்கூட்டம் வருகிற 12ம் தேதி மாலை 4:00 மணிக்கு அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us