sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உருளைக்கிழங்கு விற்பனை உத்தி அறிய மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு வருகிறது மிசோரம் குழு!

/

உருளைக்கிழங்கு விற்பனை உத்தி அறிய மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு வருகிறது மிசோரம் குழு!

உருளைக்கிழங்கு விற்பனை உத்தி அறிய மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு வருகிறது மிசோரம் குழு!

உருளைக்கிழங்கு விற்பனை உத்தி அறிய மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு வருகிறது மிசோரம் குழு!


ADDED : பிப் 04, 2025 12:17 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ஓர் ஆண்டில், 20 ஆயிரம் மெட்ரிக் டன் ஊட்டி உருளைக்கிழங்குகள் ரூ.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் செயல்பாடுகள், விற்பனை உத்திகள் போன்றவைகளை கற்றுக்கொள்ள மிசோரம் மாநில உயர் மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் மார்ச் மாதம் மேட்டுப்பாளையம் வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் கேத்தி, குன்னுார், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகள் இச்சங்கத்தின் விற்பனை கூடம் வாயிலாக தினமும் ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தரமான உருளைக்கிழங்குகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து, துாத்துக்குடிக்கு துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கேரளாவுக்கும் அனுப்புகின்றனர்.

இங்கு விற்பனை செய்தால், விவசாயிகள் வியாபாரிகளுக்கு கமிஷன் கொடுக்க தேவையில்லை என்பதால், விவசாயிகள் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதை விட இங்கு விற்பனை செய்யவே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் இச்சங்கத்தில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் துணை பதிவாளர் முத்துக்குமார் கூறியதாவது:-

கடந்த 2023-24ம் நிதியாண்டில் 20 ஆயிரத்து 677 மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகள், ரூ.54 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜன. 31ம் தேதி வரை 20 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகள், ரூ.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊட்டி பூண்டுகள் முதல் முதலாக விற்பனை செய்யப்பட்டன. ரூ.75 லட்சத்திற்கு தற்போது வரை பூண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

மிசோரம் அரசு, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், கூட்டுறவுத் துறை அமைச்சரின் தலைமையில் விவசாய சந்தை உறுதி நிதி மேலாண்மைக் குழு அமைத்துள்ளது. இந்த குழு மிசோராமில், கூட்டுறவு விற்பனை சங்கத்தை செயல்படுத்த, சிறந்த கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை கள ஆய்வு செய்தது.

அதன் படி, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம், மிசோரம் மாநில தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலர் தலைமையில், அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக மிசோரம் அரசிடம் அறிக்கை சமர்பித்த நிலையில், வியாபார உத்திகளை கற்றுக்கொள்ள மிசோரம் உயர் அதிகாரிகள் கொண்ட குழு மார்ச் மாதம் மேட்டுப்பாளையம் வரவுள்ளது என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us