ADDED : ஆக 15, 2025 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பஸ்சில் பயணியிடம் மொபைல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர் முரளிதரன், 27, மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊட்டி செல்லும் பஸ்ஸில் நேற்று முன் தினம் ஏறிய போது கூட்ட நெரிசலில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தனது மொபைல்போன் ஒரு நபர் எடுத்துள்ளார். உடனே அவர் சத்தம் போட அருகில் இருந்தவர்கள் செல்போன் திருடனை பிடித்தனர். அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
பின் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமுகை சேர்ந்த முனியப்பன், 36, கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மொபைல்போ னை மீட்டு சிறையில் அடைத்தனர்.----