sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'

/

'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'

'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'

'மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'


ADDED : டிச 06, 2024 11:19 PM

Google News

ADDED : டிச 06, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; படிக்கும் வயதில் தேவையின்றி மொபைல்போன் பயன்படுத்துவதை மாணவியர் தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் தெரிவித்தனர்.

வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது. பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார்.

மகளிர் போலீஸ் ஏட்டு மீரா, மாணவியருக்கு பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகள் கூறினார். அவர் பேசியதாவது:

மாணவியர் வசிக்கும் பகுதியிலும், பள்ளிக்கு வரும் வழியிலும் பாலியல் ரீதியாக யாரேனும் துன்புறுத்தினால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் வாயிலாக தவறான தகவல் அனுப்பினாலும், ஆபாச வார்த்தைகளால் பேசினாலும் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கான சட்டம் மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் அளிக்கும் புகாரில் உண்மை தன்மை இருக்க வேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவியர் வெளியிடங்களுக்கு செல்லும் போது, நாகரீகமான உடைகளை அணியவேண்டும். நல்ல சிந்தனைகள் மட்டுமே நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். நேரம் கிடைக்கும் போது, பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் ஒரு போதும் இடம் தரக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.






      Dinamalar
      Follow us