ADDED : டிச 13, 2025 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சியில், உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வு கூடம் வாயிலாக விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது.
'அட்மா' திட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
வேளாண் துணை அலுவலர் மோகன சுந்தரம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மண்புழு தொட்டி அமைப்பதற்கான மானியம் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து பேசினார்.
மண் ஆய்வக வேளாண் அலுவலர் சுகன்யா, கால்நடை மற்றும் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இதில், 25 விவசாயிகளுக்கு, மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

