sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்

/

நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்

நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்

நவ. 2 வரை மிதமான மழை : காலநிலை மையம் தகவல்


ADDED : அக் 30, 2025 11:02 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், வரும் நவ. 2 வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, வேளாண் காலநிலை மையம் அறிவித்துள்ளது.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:

கோவை மாவட்டத்தில், வரும் நவ. 2 வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மழை மற்றும் மண்ணின் ஈரப்பதம் காரணமாக, வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகும். விதைப்பு, நடவு, உரமிடல் போன்ற பணிகளை ஒத்திவைக்கவும்.

கால்நடை மற்றும் கோழிப்பண்ணை அருகே போதிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கால்நடை தீவனங்களை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாத தீவனங்களை கொடுப்பதன் வாயிலாக, பூஞ்சான தொற்றில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம். மழையில் புதிதாக முளைத்த புற்களை கால்நடைகளுக்கு கொடுக்கவோ, மேய்ச்சலுக்கு அனுமதிக்கவோ வேண்டாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us