sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் தீவிரமடைந்த பருவமழை; அணை நீர்மட்டம் உயர்வு

/

மீண்டும் தீவிரமடைந்த பருவமழை; அணை நீர்மட்டம் உயர்வு

மீண்டும் தீவிரமடைந்த பருவமழை; அணை நீர்மட்டம் உயர்வு

மீண்டும் தீவிரமடைந்த பருவமழை; அணை நீர்மட்டம் உயர்வு


ADDED : ஆக 15, 2025 08:48 PM

Google News

ADDED : ஆக 15, 2025 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில், பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்வதால் பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்துவங்கியது. தொடர் மழையால், ஜூன் 26ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு பின் வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு முதல் பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்கிறது. இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கனமழையால் ஆறு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகம் உள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வால்பாறை வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர்.

சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 159.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,889 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,095 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 39, பரம்பிக்குளம் - 25, ஆழியாறு - 5, வால்பாறை - 37, மேல்நீராறு - 55, கீழ்நீராறு - 31, காடம்பாறை - 9, சர்க்கார்பதி - 13, வேட்டைக்காரன்புதுார் - 9, மணக்கடவு - 16, துாணக்கடவு - 13, பெருவாரிப்பள்ளம் - 15, நவமலை - 3, பொள்ளாச்சி - 6 என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us