ADDED : ஜூலை 19, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, புலியகுளம், கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.
இவரது மனைவி முருகம்மாள்,60, மூத்த மகன் சிங்கமுத்து,30, ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், கடந்த 15 ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெளியே சென்ற இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சண்முகத்தின் இளைய மகன் மகேந்திரன், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.