sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

 குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

 குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

 குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 17, 2025 12:25 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை அடுத்த, கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், ரங்கராஜபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள சாலைக்கு தார் போட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இதனால் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, மேடு பள்ளமாகவும், ஜல்லிக்கற்கள் நிறைந்த சாலையாகவும் உள்ளது. இதனால் இவ்வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்ல, மக்கள் சிரமம் அடைகின்றனர்.

இது குறித்து ரங்கராஜபுரம் பொதுமக்கள் கூறுகையில், 'ரங்கராஜபுரம் அருகே தனியார் பேப்பர் கம்பெனி உள்ளது.

இக்கம்பெனிக்கு ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர், வெள்ளியங்காடு, கண்டியூர், ஆஸ்பத்திரி மேடு, ரங்கராஜபுரம் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த சாலையாக உள்ளது. இரவில் பலர் விபத்துக்குள்ளாகி, கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

மேலும் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கும், மேட்டுப்பாளையம் நகருக்கும் இந்த சாலை வழியாக, ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

எனவே ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ள இந்த சாலைக்கு, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தார் சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us