/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மும்பை போலீஸ் என ரூ.22 லட்சம் மோசடி
/
மும்பை போலீஸ் என ரூ.22 லட்சம் மோசடி
ADDED : ஆக 13, 2025 09:55 PM
கோவை; கணபதியை சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவரது மொபைல்போனுக்கு கடந்த மாதம், அழைப்பு ஒன்று வந்தது. அதில் மும்பை போலீஸ் என பேசிய நபர் பழனிசாமியின் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், அதற்காக கைது தவிர்க்க ரூ.22 லட்சம் வேண்டும் எனத் தெரிவித்தனர்.
பழனிசாமி ரூ.22 லட்சத்தை அவர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பினார். அதன் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. பழனிசாமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், கோவை காந்திபுரத்தை சேர்ந்த தேவசேனை என்பவருக்கு போன் செய்த மர்மநபர், பெங்களூருவில் இருந்து தொலைத் தொடர்பு அலுவலர்கள் பேசுவதாக தெரிவித்தனர். அவரது ஆதார்கார்டு மூலம் அதிக சிம் கார்டுகளை வாங்கி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்படுவதை தடுக்க ரூ.17 லட்சம் கேட்டுள்ளனர். தேவசேனை ரூ.17 லட்சம் அனுப்பினார். அந்நபரை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. புகாரின் பேரில், மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

