sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மார்கழி சங்கீத உற்சவ விழா இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

/

 மார்கழி சங்கீத உற்சவ விழா இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

 மார்கழி சங்கீத உற்சவ விழா இசை ஆர்வலர்கள் பங்கேற்பு

 மார்கழி சங்கீத உற்சவ விழா இசை ஆர்வலர்கள் பங்கேற்பு


ADDED : டிச 30, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத் தில் உள்ள இசைத்தமிழ் சங்கத்தின் சார்பில், மார்கழி மாத சங்கீத உற்சவ விழா நடந்தது.

நிகழ்ச்சியில், இச்சங்கத்தின் செயலாளர் சிவாய ராமலிங்கம் வரவேற்றார். மாணிக்க விநாயகர் ஆலய நிர்வாகி வீராசாமி தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார்.

முதல் நாள், சித்ரலேகா ராமச்சந்திரனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவி நிரஞ்சனாவின் சாக்சா போன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கு வடசித்தூர் ராமச்சந்திரன் மிருதங்கமும், ஊட்டி ராஜேந்திரன் வயலின், கோவை பிரகாஷ் கஞ்சிரா, நாயக்கன்பாளையம் ஜெகநாதன் முகர்சிங் வாசித்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், சிறுமுகை மதுவந்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து பொள்ளாச்சி இசை சகோதரிகளான அமிர்தவர்ஷினி, ஹர்ஷினி ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

இதற்கு பொள்ளாச்சி சங்கீத் வர்மன் வயலின், பொள்ளாச்சி மணிகண்டன் மிருதங்கமும், கோவை பிரகாஷ் கஞ்சிரா, சந்திரகாந்த் கடமும், நாயக்கன்பாளையம் ஜெகநாதன் முகர்சிங்கும் வாசித்தனர்.

நிறைவு விழாவுக்கு மாணிக்க விநாயக ஆலய நிர்வாகி பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்து, இசை கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us