sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நாச்சியார் நெக்ஸ்ட் ' நாடகம்; 31ல் கோவையில் அரங்கேற்றம்

/

'நாச்சியார் நெக்ஸ்ட் ' நாடகம்; 31ல் கோவையில் அரங்கேற்றம்

'நாச்சியார் நெக்ஸ்ட் ' நாடகம்; 31ல் கோவையில் அரங்கேற்றம்

'நாச்சியார் நெக்ஸ்ட் ' நாடகம்; 31ல் கோவையில் அரங்கேற்றம்


ADDED : ஆக 25, 2025 10:09 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் அபியாசா நடனப்பள்ளி சார்பில், நடன கலைஞர் அனிதா ரத்னத்தின், 'நாச்சியார் நெக்ஸ்ட்' என்ற நாட்டிய நாடகம், கோவையில் முதன்முறையாக அரங்கேற்றப்படுகிறது.

ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை நவீன முறையில் சொல்லும், 70 நிமிட நாட்டிய நாடகம், 31 ஞாயிறு மாலை 6.30 முதல் 8 மணி வரை குமரகுரு கல்லுாரி வளாகத்தில் உள்ள ராமாநந்த அடிகளார் அரங்கத்தில் நடைபெறுகிறது.

அபியாசா அகாடமி நிறுவனர் லாவண்யா சங்கர் கூறுகையில், ''அரங்கம் டான்ஸ் தியேட்டரின் தயாரிப்பான, 'நாச்சியார் நெக்ஸ்ட்' நாட்டிய நாடகம், காலத்தை வென்ற ஆண்டாளின் பக்திக்கு செலுத்தும் ஒரு அஞ்சலியாகும். இந்த நாடகம் பாரம்பரிய நடனம், நாடக நடிப்பு, சடங்குப் பாடல்கள், கதை சொல்லல் மற்றும் நவீன அசைவுகள் ஆகியவற்றின் கலவை. இது, செவ்வியல் நடன ஆர்வலர்கள் மற்றும் இன்றைய தலைமுறை ரசிகர்கள் என அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இந்த நாட்டிய நாடகத்தை பார்க்க, 1,000 ரூபாய், 750 ரூபாய், மாணவர்களுக்கு 250 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us