sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கொங்கு நாட்டின் 'நாகப்பட்டணம்'

/

 கொங்கு நாட்டின் 'நாகப்பட்டணம்'

 கொங்கு நாட்டின் 'நாகப்பட்டணம்'

 கொங்கு நாட்டின் 'நாகப்பட்டணம்'


ADDED : டிச 29, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சையை அடுத்துள்ள மாவட்டமாக அறியப்படும் நாகப்பட்டணம் போலவே, கொங்கு நாட்டிலும் இதே பெயருடன் ஒரு பசுமை நிறைந்த ஊர் 1879-ம் ஆண்டு வரை இருந்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரம் முதல் நொய்யல் ஆற்றின் கரையான காஞ்சியாற்றங்கரை வரை பரந்த இந்த ஊர், 'நாகேசுர நல்லுார்' என்று பெயராலும் அழைக்கப்பட்டது. இச்சிற்றுாரை உள்ளடக்கிய பெரிய ஊர் முட்டம் ஆகும்.

இந்த ஊரில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைணவக் கோயிலும், அதற்கும் முன்பே உருவான சிவாலயமும் இருந்தன. கொங்குச் சோழன் கரிகாலன், கரூரிலிருந்து இவ்வூர் வரை, 32 அணைகள் கட்டி வேளாண்மை வளர்ச்சியை ஏற்படுத்தினான்; அவற்றில் ஒன்றே முட்டத்து அணை. 36 சிவாலயங்கள் கட்டப்பட்டதாக முட்டம் தல வரலாறு கூறுகிறது. 1998ம் ஆண்டு முட்டத்துநாகேசுரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

வெள்ளியங்கிரி மலைக்கு அளிக்கப்பட்ட தெய் வீ கப் பெருமை, அரச மரங்கள் அடர்ந்த 'அரச வனம்' என்ற பெயராலும் விளங்கியது. ஆதி சங்கரர் பாடியதாகக் கூறப்படும் வடமொழிச் சுலோகம், இன்றும் பேரூர் ஆற்றங்கரையில் ஓதப்பட்டு வருகிறது. 1879ம் ஆண்டு இந்த நாகப்பட்டணம், போளுவாம் பட்டியுடன் இணைக்கப்பட்டபின், அதன் தனிப்பட்ட அடையாளம் மறைந்தது. ஆனால் அதன் வரலாற்றுச் சுவடுகள் கோவையில் நிலைத்தன.






      Dinamalar
      Follow us