sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்

/

தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்

தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்

தேசியளவிலான கூடைப்பந்து போட்டி; ஆக்ரோஷமாக விளையாடிய அணிகள்


ADDED : பிப் 17, 2025 11:17 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியில் 'திறன்-25' எனும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி, மூன்று நாட்கள் நடந்தது.

இதில், ஆண்கள், பெண் கள் பிரிவில் தலா எட்டு அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் விளையாடின. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டியில், சென்னை எம்.சி.சி., அணி, 70-67 என்ற புள்ளி கணக்கில், பெங்களூரு ஜெயின் பல்கலை அணியை வென்றது.

இரண்டாம் அரையிறுதி போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 54-41 என்ற புள்ளிகளில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை வீழ்த்தின.

இறுதிப்போட்டியில், எம்.சி.சி., அணி, 79-76 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.

மூன்றாம் இடத்தை, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையும், நான்காம் இடத்தை ஜெயின் பல்கலை அணியும் பிடித்தன.

பெண்களுக்கான முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 64-41 என்ற புள்ளிகளில், சென்னை ஜே.பி.ஆர்., அணியையும், இரண்டாம் அரையிறுதியில் எம்.ஓ.பி., வைஷ்ணவி கல்லுாரி அணி, 87-43 என்ற புள்ளிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை வென்றது.

இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 63-56 என்ற புள்ளிகளில், எம்.ஓ.பி., கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.

ஜே.பி.ஆர்., அணி மூன்றாம் இடத்தையும், எஸ்.ஆர்.எம்., அணி நான்காம் இடத்தையும் பிடித்த நிலையில், கல்லுாரி இயக்குனர் ராஜாராம், தலைவர் மோகன்ராம், முதல்வர் சுதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us