/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 அடி கம்பத்தில் பறந்த தேசியக்கொடி; புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்
/
100 அடி கம்பத்தில் பறந்த தேசியக்கொடி; புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்
100 அடி கம்பத்தில் பறந்த தேசியக்கொடி; புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்
100 அடி கம்பத்தில் பறந்த தேசியக்கொடி; புதுப்பொலிவு பெற்ற ரயில்வே ஸ்டேஷன்
ADDED : ஜூலை 21, 2025 10:15 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முன், 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ரயில்வே ஸ்டேஷன்களை, தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், பயணியருக்குகான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன 'பார்க்கிங்' மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டுவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது.அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணி, 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
வாகன நிறுத்த பகுதியில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. நுழைவுவாயில் முகப்பு பகுதி முழுவதுமாக சீரமைக்கப்படுகிறது. முகப்பு பகுதியில் பூங்கா போன்று அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பாலக்காடு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் உடன் இருந்தனர்.
அப்போது, ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயில் முகப்பு பகுதியில், 100 அடி உயரத்துக்கு கம்பம் அமைத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனில், 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

