/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி
/
தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி
ADDED : பிப் 17, 2025 11:14 PM

கோவை; பாரதியார் பல்கலையில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
பாரதியார் பல்கலையில் இரண்டாவது, தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்-2025 போட்டி நடந்தது. இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடவியல் துறை இரண்டாமாண்டு மாணவர் பிரனீஷ், 14-17 வயதுக்குட்பட்டோர் 'கட்டா' பிரிவில், மூன்றாவது பரிசை வென்றார்.
இம்மாணவர், இலங்கையில்நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இம்மாணவரை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.