sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி; கோவையில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

/

தேசிய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி; கோவையில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

தேசிய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி; கோவையில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்

தேசிய அளவில் கால்நடை கணக்கெடுப்பு பணி; கோவையில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்


ADDED : ஏப் 01, 2025 11:16 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்டத்தில், கால்நடை கணக்கெடுப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,1,027 கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில், கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. தேசிய அளவில் கால்நடை சார்ந்த திட்டங்கள், கொள்கைகளை வகுத்தல், நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில், இக்கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி, 2024 அக்.,ல் துவங்கியது. கணக்கெடுப்பு பணி, மார்ச் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்ட துணை இயக்குனர் சுகுமார் கூறியதாவது:

1046 கிராமங்களில் கணக் கெடுப்பு பணி நடத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 1027 கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கால்நடை விபரங்கள், அதன் வேலைத்திறன், விவசாய தளவாட கருவிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், இக்கணக்கெடுப்பில் சேகரிக்கின்றோம்.

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 13.66 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடுகள் 4.28 லட்சமும், கோழிகள் 1.8 கோடியும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5,000 வீடுகளுக்கு ஒருவர் வீதம், கணக்கெடுப்பு பணியில் 234 பேர் ஈடுபட்டுள்ளனர். களப்பணியில் எடுக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்யும், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஏப்., 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us