ADDED : ஆக 12, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: தேசிய நூலகர் தின விழா அன்னூரில் நேற்று நடந்தது.
சீர்காழியைச் சேர்ந்த ரங்கநாதன், நூலக துறையில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். நூலகத்தை வகைப்படுத்தி விபரப்பட்டியல் தயாரிக்கும் முறையை ஏற்படுத்தினார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகப்படுத்தினார். நூலகத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இந்திய அரசு இவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கியது. ரங்கநாதனின் பிறந்தநாள் தேசிய நூலகர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
அன்னூர் கிளை நூலகத்தில், கிளை நூலகர் சிவக்குமார் தலைமையில் நூலகர் தின விழா நேற்று நடந்தது. ரங்கநாதன் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நூலகவியலின் தந்தை ரங்கநாதனின் சாதனைகள் குறித்து நூலகர் பேசினார். வாசகர்கள் பங்கேற்றனர்.
