sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

/

அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று


ADDED : ஜன 23, 2025 11:25 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; வால்பாறை அரசு மருத்துவமனைக்கு, மத்திய அரசின் 'லஷ் சியா' தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மத்திய மருத்துவக்குழுவினர், தமிழக அரசின் மருத்துவமனைகளின் தரம் குறித்து ஆய்வு செய்கின்றனர். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகிறது.

குறிப்பாக, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு என மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்க்கொள்ளப்படும்.

மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவுகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, 70 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றால், அம்மருத்துவமனைக்கு தேசிய தர உறுதி சான்று வழங்கப்படுகிறது.

கடந்த, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி வால்பாறை அரசு மருத்துவமனையில், மத்திய தேசிய தரச்சான்று குழுவினர், ஆய்வு நடத்தினர். அரசு மருத்துவமனையில் பிரசவ அறைக்கு, 86 மதிப்பெண்கள்; சுகாதாரமான பிரசவ அறுவை சிகிச்சை பிரிவுக்கு, 84 சதவீதம் மதிப்பெண் பெற்று மத்திய அரசின் 'லக் ஷியா' தேசிய தரச்சான்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கான சான்று வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், தலைமை மருத்துவர் நித்யாவிடம் சான்றிதழை வழங்கினார்.

சோதனையிலும் சாதனை!


வால்பாறை அரசு மருத்துவமனையில், 12 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், 4 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். புதியதாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டாலும், மலைப்பகுதி என்பதால், டிரான்ஸ்பர் வாங்கி செல்கின்றனர்.

இதனால், வால்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை என்பது தீராத பிரச்னையாக உள்ளது. குறைவான டாக்டர்களே பணியில் இருந்தாலும், கடந்த ஆண்டு மட்டும், 196 குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளன. தொடர்ந்து, இரண்டாவது முறையாக மத்திய அரசின் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us