/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய இளைஞர் தின விழா மாணவர்களின் குறுநாடகம்
/
தேசிய இளைஞர் தின விழா மாணவர்களின் குறுநாடகம்
ADDED : ஜன 16, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் விவேகானந்தர் உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாணவி மதுமித்ரா விவேகானந்தர் குறித்த செய்திகளை விவரித்தார்.
தமிழாசிரியர் கருப்பாத்தாள் விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து பேசினார். துவக்கப்பள்ளி மாணவர்கள் மாறுவேடமணிந்து, அவரின் பொன்மொழிகளை கூறினர்.
மாணவர்களின் குறுநாடகம் நடந்தது. பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.