ADDED : பிப் 28, 2026 05:41 AM
20 ஆண்டுகளாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கி வரும் நவபாரத் கல்வி நிறுவனங்கள்,கல்வி என்பது மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல, வாழ்க்கையை வடிவமைப்பதற்கான அடித்தளம் என்ற உயர்ந்த நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் கீழ் அன்னுார் நவபாரத் நேசனல் பள்ளி, நவ பாரத் சர்வதேசப் பள்ளி, சத்தியமங்கலம் நவ பாரத் மார்டன் பள்ளி, சோமனுார் நவபாரத் கிண்டர் கார்டன் பள்ளி, பல்லடம் நவ பாரத் ராயல் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. நவீன கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள், இன்ட்ராக்டிக் ஒயிட் போர்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் டிவைஸ் வாயிலாக மாணவர்களின் கற்றல் அனுபவம் மேம்படுத்தப்படுகிறது.
நீட், ஜெ.இ.இ., சி.யு.இ.டி., சி.எல். ஏ.டி., உள்பட சி.ஏ., பவுண்டேசன், சி. எம்.ஏ., பவுண்டேசன் என போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாண வர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்காக நீச்சல், யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங், உடற்பயிற்சி கூடம், செஸ், கேரம், இசை போன்ற பல்வேறு பயிற்சிகளை வல்லுனர்கள் வாயிலாக அளிக்கப்படுகிறது. ரெசிடன்சியல் வசதியுடன் கூடிய பள்ளிகளுக்கு தனித்தனி குளிரூட்டப்பட்ட விடுதி அறைகள், 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு, சத்தான சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படும் உணவுக்கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
