/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்
/
என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்
ADDED : ஜூன் 16, 2025 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
தேசிய மாணவர் படை கோவை 6 டி.என்., மெட் சி.ஓ.ஓய்., என்.சி.சி., மற்றும் கோவை குரூப் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
100 மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய ரத்ததான முகாம், மதியம் 12:00 வரை நடந்தது.
துவக்க விழாவுக்கு, சுபேதார் மாரியப்பன், சுபேதார் வினோத்சிங், ஹவில்தார் சத்யம் சிங், ஹவில்தார் தீபக் ஆகியோர் தலைமைவகித்தனர்.
கோவையின் பல்வேறு பட்டாலியன் மற்றும் கம்பெனிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர்.