sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்

/

கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்

கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்

கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்


ADDED : டிச 17, 2024 11:33 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; ''கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்,'' என, சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருமத்தம்பட்டி சுற்று வட்டார கிராமங்களின் மையப் பகுதியாகும். அன்னூர் ரோடு, அவிநாசி ரோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, கருமத்தம்பட்டி வந்துதான் செல்ல வேண்டும். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கருமத்தம்பட்டியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். போதுமான பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில், ''போதிய பஸ்கள் இல்லாததால், வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோரும் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை.

அதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us