sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

/

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை


ADDED : பிப் 03, 2025 04:13 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுமார், 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

இதற்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில், யாகசாலை மண்டபம் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவிலில் இருந்த கொடி மரம், நிறுவப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டதால், கொடிமரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக, கடந்தாண்டு, ஜனவரி மாதம், கேரள மாநிலம், சபரிமலை அருகே உள்ள பாலா என்ற பகுதியில் இருந்து, 57 அடி உயரமும், 5.5 அடி விட்டமும் கொண்ட தேக்கு மரம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

4 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மரத்தை, உபயதாரர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். இதனை, கடந்த ஓராண்டாக, கோவில் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து, உரிய முறையில், தயார் செய்தனர். கோவிலில் உள்ள பழைய கொடிமரம், பாதுகாப்பாக அகற்றப்பட்டது. தொடர்ந்து, 57 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us