sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?

/

புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?

புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?

புத்தாண்டில் புதுநம்பிக்கை; கனவு நனவாகுமா?


ADDED : ஜன 01, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : இன்று புதிய ஆண்டு பிறக்கிறது. சோதனைகள் பல இருந்தாலும், 2024ம் ஆண்டு வறட்சி நீங்கி, மண்ணையும், விவசாயிகளின் மனதையும் குளிர்ச்சிபடுத்த மழை கைகொடுத்தது.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போது, இந்தாண்டாவது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன், புத்தாண்டை வரவேற்பது இயல்பாகி விட்டது.

பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், ஒன்றியங்கள் பிரிக்க வேண்டும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யணும், அரசு மருத்துவமனையில் அனைத்து டாக்டர்களும் நியமித்து, சிகிச்சை முறையாக கிடைக்க வேண்டும் என்று மக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தாண்டும், பொள்ளாச்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன், புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கின்றனர் பொள்ளாச்சி மக்கள்.

காத்திருக்கிறோம்!

கிருஷ்ணபாலாஜி, தனியார் நிறுவன ஊழியர், பொள்ளாச்சி: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1857ல் வருவாய் கோட்டமாக செயல்பட்ட பொள்ளாச்சியில் இருந்த திருப்பூர், 2008ல் மாவட்டமானது. ஆனால், பொள்ளாச்சி வருவாய் கோட்டமாகவே உள்ளது.பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு முறை பட்ஜெட் கூட்டத்திலும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டமாக அனைத்து தகுதிகளும் பொள்ளாச்சிக்கு இருந்தும் ஏன் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை என தெரியவில்லை. நீண்ட கால கோரிக்கை இந்த ஆண்டிலாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.



உறுதியேற்போம்!

ஞானசேகரன், தேசிய பசுமைப்படை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: காலநிலை மாற்றத்தால் உலக வெப்ப மயமானதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மாசடைந்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவதால், சீதோஷ்ண நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழி பையை தவிர்ப்போம். துணி பைகளை பயன்படுத்துவோம்.விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்தி சத்தான உணவுப்பொருட்களை தயாரிக்க உறுதியேற்போம். பொள்ளாச்சியின் பசுமையை இணைந்து பாதுகாப்போம். நீர்நிலைகளை பாதுகாத்து, நீர் சேமிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ புத்தாண்டில் உறுதியேற்போம்.



நிறைவேற்றணும்!

பாலமுருகன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனுார்: பொள்ளாச்சி நிறைய வளங்களை பெற்று இருந்தாலும், நிறைவேறாத ஏக்கங்களும் உண்டு. பொள்ளாச்சி மாவட்டம் எனும் தாகம் இந்தாண்டாவது தீர வேண்டும். பசுமை வழிச்சாலைகளாக இருந்த பல சாலைகள், இன்று நான்கு வழிச்சாலைகளாக மாறி பசுமையை இழந்து நிற்கின்றன.அனைவரும் ஒன்றிணைந்து நான்கு வழிச்சாலைகளை பசுமை வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.பொள்ளாச்சிக்கு இந்தாண்டு சிறப்பு சேர்க்கும் வகையில், மைய நுாலக கட்டடம் உருவாக வேண்டும். நகரில், சிறுவர்களுக்கு என ஒரு நுாலகத்தை ஏற்படுத்த வேண்டும். பொள்ளாச்சியின் பாரம்பரிய சந்தையை மீட்டெடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



குறைகள் நீங்கணும்

கீதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஏரிப்பட்டி: பொதுவாக அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. பல வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. வகுப்பறைகள் திருப்தியாக இருக்க வேண்டும். நுாலகம், ஆய்வகத்துக்கு என தனித்தனி வகுப்பறைகள் இருந்தால், கல்வி மேம்படும். நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு என, தனி உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் வாரம் ஒரு முறை வந்து பலவித விளையாட்டுகளை கற்றுத்தர வேண்டும். இதனால், மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து விளையாட்டு வகுப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும். புது வகுப்பறைகள், பராமரிக்கப்பட்ட வகுப்புகள் இந்தாண்டாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை ஆசிரியர்கள் வரவேற்கிறோம்.



எதிர்பார்ப்புகள் ஏராளம்!

சரவணன், விவசாயி, பணிக்கம்பட்டி: தென்னையில் பல்வேறு நோய் தாக்குதல் பிரச்னைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேங்காய், கொப்பரைக்கு விலை கிடைத்தாலும், விவசாயிகளிடம் இருப்பு இல்லாததால், விலை உயர்ந்தும் முழு பலனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.தக்காளி அதிக விளைச்சல் இருந்தாலும், விலை குறைவதும், விளைச்சல் இல்லாத போது, விலை உயர்வதாலும், முழு பலனை பெற முடியவில்லை. இந்த பிரச்னைகள் எல்லாம் நீங்கி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படும் என்ற எதிர்பார்ப்போடு புத்தாண்டை எதிர்பார்க்கிறேன். மாணவர்களின் வசதிக்காக அரசு பாலிடெக்னிக், சித்தா மருத்துவ கல்லுாரி, நர்சிங் கல்லுாரி உருவாக்க வேண்டும்.



வேலைவாய்ப்பு பெருகணும்!

மோகன்ராஜ், துணை முதல்வர், சுவஸ்திக் மெட்ரிக் பள்ளி, நெகமம்: புத்தாண்டில் நம்முடைய கஷ்டங்கள் நீங்கி புதுவிடியல் பிறக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். உயர்தர சிகிச்சைகள் அளிக்கும் போது, தரம் வாய்ந்த சிகிச்சை கருவிகளுடன், போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.அரசுத்துறைகளின் வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் மாறி, படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.பொள்ளாச்சி மாவட்டம் என்ற எதிர்பார்ப்பை இந்தாண்டாவது நிறைவேற்ற வேண்டும். முதுகெலும்பாக உள்ள தென்னை விவசாயம் செழிப்பு பெற வேண்டும்.








      Dinamalar
      Follow us