/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் புதிய சலவையகம்
/
அரசு மருத்துவமனையில் புதிய சலவையகம்
ADDED : டிச 07, 2025 06:53 AM

கோவை: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பத்து மாதங்களாக நடந்து வந்த புதிய சலவையகத்திற்கான கட்டுமான பணி முடிந்துள்ள சூழலில், விரைவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவுள்ளது.
அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு என சுமார், 3000 படுக்கைகள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்படும் மெத்தை விரிப்பு, தலையணை உறை அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீராவி சலவையகத்தில், சலவை செய்து பயன்படுத்தப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள, நீராவி சலவை அமைப்பு, 1990ல் ஏற்படுத்தப்பட்டது. பழைய கட்டமைப்பு என்பதால், பயன்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், தரைத்தளம், இரண்டு மாடியுடன், 6950 சதுர அடியில் புதிய சலவையகம் கட்டப்பட்டுள்ளது.
டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தேவையான தண்ணீர் வசதி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்,'' என்றார்.

