sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய பாதிரியார் பொறுப்பேற்பு

/

புதிய பாதிரியார் பொறுப்பேற்பு

புதிய பாதிரியார் பொறுப்பேற்பு

புதிய பாதிரியார் பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 05, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புதிய பாதிரியார் பொறுப்பேற்கும் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியாராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றியவர் ஹென்றி லாரன்ஸ். இவர் திருப்பூர் குமார் நகரில் உள்ள சூசையப்பர் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலய பங்கு பாதிரியார் பிலிப், மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலய பங்கிற்கு மாற்றப்பட்டார்.

புதிய பாதிரியார் பொறுப்பேற்கும் சிறப்பு திருப்பலி புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்தது. கோவை மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் செல்வராஜ் தலைமை வகித்து, திருப்பலியை துவக்கி வைத்து, ஆலயத்தின் சாவியை, பாதிரியார் பிலிப்பிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து புதிய பங்கு பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றினார்.

இதில் முன்னாள் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், பாதிரியார்கள் ஞானபிரகாசம், மரிய சுந்தரம், சிஜு, திருத்தொண்டர் மிக்கேல் அதிதூதர் ஆகியோர் பங்கேற்று, திருப்பலியை நிறைவேற்றினர். இவ்விழாவில் திருப்பூர் குமார் நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு மக்கள், மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதிரியாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us