/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலை கிராமங்கள் இடையே வருகிறது புதிய தார் சாலை
/
மலை கிராமங்கள் இடையே வருகிறது புதிய தார் சாலை
ADDED : அக் 26, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே மலை கிராமங்களான தூமனூர், சேம்புக்கரை இடையே புதிய தார் சாலை விரைவில் அமைக்கப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், ஆனைகட்டி அருகே சேம்புக்கரை மற்றும் தூமனூர் மலை கிராமங்கள் இடையே, தார் சாலை அமைக்க இரண்டு கிராம மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இவ்விரு கிராமங்களுக்கு இடையே, பிரதான் மந்திரி ஜன்சக்தி ஆதிவாசி நியாய மகா அபியன் திட்டத்தில், இம்மலை கிராமங்களுக்கு இடையே, 3.12 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

