sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்'

/

'புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்'

'புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்'

'புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்'


ADDED : மார் 30, 2025 10:57 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; 'புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்' என, வேளாண் மாணவியர் தெரிவித்தனர்.

தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை மாணவியர் செயல்முறை விளக்க கூட்டத்தை நடத்தினர்.

இதில், கொப்பரையில் அதிக மகசூல் பெறுவதற்கான நவீன நுட்பங்கள் குறித்து மாணவியர் விளக்கங்களை அளித்தனர். மேலும், தாவர பாதுகாப்பு, நீர்ப்பாசனத்திற்கான உகந்த முறை, உரமிடுதல், அணில் தொல்லை, குரும்பை உதிர்வு, வெள்ளை ஈ தாக்குதல், அழுகல் நோய் தீர்வு முறைகளை வழங்கினர்.

விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை மாணவியரிடம் நேரடியாக கேட்டு, தீர்வுகளை பெற்றனர்.

வேளாண் பல்கலை மாணவியர் கூறுகையில், 'புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், மகசூல் அதிகரித்து, விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us