sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜோதிநகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு 

/

ஜோதிநகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு 

ஜோதிநகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு 

ஜோதிநகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு 


ADDED : ஜூன் 06, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே ஜோதிநகரில், உயரழுத்த மின்விநியோக பிரச்னையை நீக்கும் பொருட்டு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன. பெருகும் குடியிருப்பு வீடுகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, குறைவழுத்த மாறுபாடுகளால், சீரான விநியோகம் தடைபடுகிறது.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆங்காங்கே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, தடையின்றி மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அவ்வகையில், ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஜோதிநகரில், உயரழுத்தம் காரணமாக, மின்தடை ஏற்பட்டு வந்தது. அதனை சீரமைக்கும் பொருட்டு, தற்போது, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 63 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, இயக்கி வைக்கப்பட்டது.

இதில், அனைத்து மின்வாரிய பொறியாளர்களும் கலந்து கொண்டனர். இதன்வாயிலாக, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் கரிகாலசோழன்வீதியை சேர்ந்த, 350 வீடுகளுக்கு தடையின்றி மின் சப்ளை இருக்கும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us