ADDED : ஜூலை 15, 2025 08:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; உப்பார வீதி, கோதண்டராமர் கோவில் சமூக மக்கள் மகாசபை கூட்டம், கோவில் வளாகத்தில் நடந்தது. திருமூர்த்தி, நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், புதிய அறங்காவலர்களாக ரத்தினவேல், மருதராஜன், ஜவஹர் வெள்ளிங்கிரி, ராதாகிருஷ்ணன், தாமோதரன் ஆகியோர், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சிறப்புடன் பணியாற்ற, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களுக்கு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.