sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்வாரிய கோட்டூர் பிரிவு அலுவலகம் புதிதாக துவக்கம்

/

மின்வாரிய கோட்டூர் பிரிவு அலுவலகம் புதிதாக துவக்கம்

மின்வாரிய கோட்டூர் பிரிவு அலுவலகம் புதிதாக துவக்கம்

மின்வாரிய கோட்டூர் பிரிவு அலுவலகம் புதிதாக துவக்கம்


ADDED : செப் 21, 2025 11:06 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; மின்வாரியம் அங்கலக்குறிச்சி கோட்டத்தில், அங்கலக்குறிச்சி,தென்சங்கம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள பகிர்மானங்கள், மின்நுகர்வோர் வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிதாக கோட்டூர் பிரிவு அலுவலகம் துவக்கப்படவுள்ளது.

அவ்வகையில், செல்லமுத்துநகர், பொங்காளியூர் மற்றும் கோட்டூர் மின்பகிர்மானங்களில், இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது, கோட்டூர் பிரிவு அலுவலகம் துவங்கப்படவுள்ளதால், தற்போது ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும்.

அதன்படி, இம்மாதம் கணக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள மின்நுகர்வோர், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்திற்குள் மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும்.

இனிவரும் நாட்களில், செல்லமுத்துநகர், பொங்காளியூர் மற்றும் கோட்டூர் மின் பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படும். இதேபோல, அங்கலக்குறிச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஆழியார், டேம், ஜல்லிப்பட்டி, நவமலை ஆகிய மின்பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை இரட்டைப் படை மாதத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, அக்., மாதம் கணக்கீடு செய்யப்பட்டு, வரும் நாட்களில், இரட்டை படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படும்.

இத்தகவலை மின்வாரியம், அங்கலக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us