sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இனிதே ஆரம்பம்! சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்: காண்டூரில் திருமூர்த்திக்கு நீர் திறப்பு

/

இனிதே ஆரம்பம்! சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்: காண்டூரில் திருமூர்த்திக்கு நீர் திறப்பு

இனிதே ஆரம்பம்! சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்: காண்டூரில் திருமூர்த்திக்கு நீர் திறப்பு

இனிதே ஆரம்பம்! சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்: காண்டூரில் திருமூர்த்திக்கு நீர் திறப்பு


ADDED : ஆக 11, 2020 03:45 AM

Google News

ADDED : ஆக 11, 2020 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி அருகே, சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு, 800 கனஅடி தண்ணீர், கால்வாயில் செல்கிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, முதல் மண்டல பாசனத்துக்கு கடந்த மே மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்காக விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.இந்நிலையில், சோலையாறு அணை நீர்மட்டம் சில நாட்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியதால் பரம்பிக்குளம் அணைக்கு அதிகளவு தண்ணீர் செல்கிறது. துாணக்கடவில் இருந்து சர்க்கார்பதிக்கு, பைபாஸ் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வெளியேற்றம் செய்த பின், அவ்வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டது.வழக்கம் போல சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலையில் சர்க்கார்பதியில் நீர்மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திருமூர்த்தி அணைக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு தண்ணீர் சென்றடைந்தது. தொடர்ந்து, 15 நாட்கள் தண்ணீர் தேக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாம் மண்டலத்தில், 94 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில், 22.5 டி.எம்.சி., தண்ணீர் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 15 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஆனால், கடந்தாண்டு, இதே தேதியில், 9.5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. நடப்பாண்டு தண்ணீர் இருப்பு அதிகம் உள்ளதால், 2, 3ம் மண்டல பாசனத்துக்கு, தலா ஐந்து சுற்று வீதம் கிடைக்க வாய்ப்புள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, முதற்கட்டமாக வினாடிக்கு, 500 கனஅடி திறக்கப்பட்டு, 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.தொடர்ந்து, 800 கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு; 18 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.தொடர்ந்து தண்ணீர் திறப்பு அளவும், மின் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கப்படும். திருமூர்த்தி அணையில் தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது.வரும், 25ம் தேதிக்கு மேல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது,' என்றனர்.அதிகாரிகள் கண்காணிப்புபொள்ளாச்சி சர்க்கார்பதி டனல் முகப்பு பகுதி, துாணக்கடவு டனல் முகப்பு பகுதிகளில் தண்ணீர் முறையாக செல்கிறதா என கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போது மழையும் பெய்வதால், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; விரைவில் தண்ணீர் திறப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்- நிருபர் குழு -.






      Dinamalar
      Follow us