sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் விலையில் மாற்றமில்லை

/

இளநீர் விலையில் மாற்றமில்லை

இளநீர் விலையில் மாற்றமில்லை

இளநீர் விலையில் மாற்றமில்லை


ADDED : ஏப் 28, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இன்றி, 46 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 250 ரூபாய் உயர்த்தப்பட்டு, 18,750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக, இளநீரின் எடை குறைவாக உற்பத்தியாகிறது.

இதனால், எடையில் விற்பனை செய்யும் இளநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வறட்சியின் காரணமாக இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், மக்கள் நலன் கருதி, இந்த வாரம் விலை உயர்த்தப்படவில்லை.

தட்டுப்பாடு நிலவுவதால், வரக்கூடிய வாரங்களில் இளநீர் விலை உயரும். தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில், கடுமையான வெயில் நிலவுவதால், இளநீர் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இளநீரை எக்காரணத்தைக் கொண்டும் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us