ADDED : ஜூன் 01, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீரின் தேவை அதிகரித்தும், வரத்து இல்லை.
இளநீர் தரத்தை அதிகப்படுத்தவும், கூடுதல் எடையை பெறவும் கால்சியம் நைட்ரேட், பொட்டாசியம் சோனேட், பாலிசல்பேட் போன்ற உரங்களை, மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.