ADDED : ஜூன் 29, 2025 11:15 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோல, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், அனைத்து பகுதிகளிலும் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் இளநீர் மகசூல் மிகவும் குறைந்துள்ளது.
அதன் தரம் குறைந்துள்ள நிலையில், பொள்ளாச்சி பகுதிகளில் இளநீரின் தரம் நல்ல முறையில் உள்ளது. மேலும், சிவப்பு இளநீர் வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது. பச்சை இளநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நல்ல விலையை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.