sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி

/

வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி

வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி

வாக்காளர் சரிபார்ப்புக்கு வீடுவீடாக செல்வதில்லை: கண்காணிப்பு செய்யப்படுமென சப்-கலெக்டர் உறுதி


ADDED : நவ 07, 2025 08:59 PM

Google News

ADDED : நவ 07, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு வீடுவீடாக செல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்து விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்த பணி, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் நேற்று துவங்கியது.

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் பின்பகுதியில் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான தகவல் இடம் பெற்றுள்ளது.அதில், விண்ணப்ப படிவத்துடன் வழங்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில், கடந்த ஜூலை மாதம் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட சிறப்பு தீவிர திருத்த பட்டியலின் பிரதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி, தற்போதுள்ள பட்டியலை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டுமென ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பல இடங்களில் வீடுவீடாக செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தினாலும், ஒரு சிலர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்குகின்றனர்.

இதனால், வயதானோர் விண்ணப்ப படிவங்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் அமர்ந்து சரிபார்ப்பு பணிகளை பார்க்கும் போது உண்மையான பட்டியல் தயாராகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக செல்வதை உறுதிபடுத்த வேண்டும். உத்தரவுக்கு மாறாக செயல்படும் ஓட்டுச்சாவடி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி கூறுகையில், ''பொள்ளாச்சி பகுதியில் வீடுவீடாக சென்று விண்ணப்பங்கள் கொடுக்க ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

ஆசிரியர்கள் தவிப்பு!

ஆசிரியர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ஆசிரியர்கள், வாக்காளர் சரிபார்ப்பு பணியில் வரும், டிச.4ம் தேதி வரை தொடர்ந்து ஈடுபட உத்தரவிடப்பட்டது. இரு ஆசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டுள்ளதால், ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். இதனால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதுடன், மற்றொரு ஆசிரியர் எங்கே என பெற்றோர் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், 'எமிஸ்' போன்ற நிர்வாகம் சார்ந்த பணிகளை ஒரு ஆசிரியர் சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்களை இப்பணிக்கு நியமிக்க வேண்டும்,'' என்றனர்.








      Dinamalar
      Follow us