sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு

/

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு


ADDED : பிப் 11, 2026 06:44 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் என, பல்வேறு பிரிவுகளில் நுாற்றுக்கும் அதிகமான அரசு கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில், 179 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன.

உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு கல்லுாரிகளையே நாடுகின்றனர். குறிப்பாக, நடப்பு கல்வியாண்டில் சட்டக்கல்லுாரிகளில் மாற்றுத்திறன் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளின்போது, தேர்வு எழுத 'ஸ்கிரைப்' உதவியாளர்களை மாணவர்களே தேட வேண்டிய சூழல் நிலவுகிறது. இது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 'ஸ்கிரைப்' சம்பளத்தை மாணவர்களே முன்னின்று ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. சில அரசு கலை கல்லுாரிகளில், மாணவர்களும் அந்தந்தத் துறைகளும் இணைந்துசம்பளத்தை வழங்கிவிட்டு, பின் கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்கின்றனர். ஒரு நபருக்கு குறைந்தது, 200 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஆனால், சட்டக் கல்லூரிகளில் இத்தகைய நடைமுறை கூட பின்பற்றப்படுவதில்லை.

அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'சில கல்லூரிகளில் தன்னார்வலர்கள் வாயிலாக உதவியாளர்கள் கிடைக்கின்றனர். பல இடங்களில் அந்த வசதி இல்லை. மேலும், தேர்வு உதவியாளராக வருபவர், அதே பாடப்பிரிவை சார்ந்தவராக இருக்கக்கூடாது என்ற விதியும் மாணவர்களுக்கு சவாலாக உள்ளது' என்றார்.

மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 'வாட்ஸ்-அப் குழுக்கள் வாயிலாக, உதவியாளர்களை தேடுகிறோம். 'ஸ்கிரைப்' நியமிக்க கல்லுாரி நிர்வாகம் அல்லது அரசு தரப்பில் இருந்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us