ADDED : ஏப் 27, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: அசாம் மாநில தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள், மீண்டும் கோவைக்கு வரத்துவங்கியுள்ளனர்.
கடந்த 9ம் தேதி அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக, கோவையில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தவர், கடந்த மாத இறுதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அசாம் மாநில தொழிலாளர்கள் இல்லாததால், கோவை புறநகர் பகுதிகளில், தினக்கூலி தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அசாமில் தேர்தல் முடிந்து, மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது. தேர்தலுக்காக சென்ற தொழிலாளர்கள், மீண்டும் வரத்துவங்கிவிட்டனர். இதனால், தினக்கூலி பணிகளுக்கு ஏற்பட்ட ஆட்கள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
