/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போகுமிடம் வெகு துாரமில்லை... அரசு விதிகள் என்ன சொல்கின்றன?
/
போகுமிடம் வெகு துாரமில்லை... அரசு விதிகள் என்ன சொல்கின்றன?
போகுமிடம் வெகு துாரமில்லை... அரசு விதிகள் என்ன சொல்கின்றன?
போகுமிடம் வெகு துாரமில்லை... அரசு விதிகள் என்ன சொல்கின்றன?
ADDED : நவ 09, 2024 11:26 PM
கோவை: தனியார் ஆம்புலன்சில் உடலை எடுத்து செல்வதில் உள்ள அரசு விதிகள் பற்றி, கோவை இ.எஸ்.ஐ., டீன் விளக்கம் அளித்தார்.
கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த, 39 வயது நபர், சமீபத்தில், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், கோவை சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து, பல மணி நேரம் ஆகியும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை சார்பில், உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தி (ஆம்புலன்ஸ்) வசதி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், உறவினர்கள் அங்கு திரண்டனர். 'அமரர் ஊர்தி' வசதி செய்து கொடுக்காததை கண்டித்து, மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காநல்லுார் போலீசார், மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சு நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
டீன் ரவீந்திரன் கூறியதாவது:
இறந்தவரின் உடலை தனியார் ஆம்புலன்சில் எடுத்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அதற்கு மருத்துவமனையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு ஆம்புலன்சில் இரண்டு உடல்கள் எடுத்து செல்வது வழக்கம். அதனால், அவரது குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்சில் எடுத்து செல்வதாகவும், ஆம்புலன்ஸ் தாமதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து, உடலை தனியார் ஆம்புலன்சில் எடுத்து செல்ல, கலெக்டரின் உத்தரவு வேண்டும். இதுகுறித்து அவர்களிடம் எடுத்து கூறிய போது போராட்டத்தை கைவிட்டனர்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து தனியார் ஆம்புலன்சில் உடலை எடுத்து செல்ல ஒருபோதும் அனுமதி அளிக்கப்படாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.